போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளன்று பெருந்திரள் மக்கள் முளைப்பாரி, பால்குடம், காவடி, அலகு குத்துதல் போன்றவற்றுடன் வந்து நினைவிடத்தில் வணங்குவது வழக்கமான ஒன்று.
பலர் இவ்வழிபாட்டு முறைகளை இந்துத்துவச் சடங்குகள் என்றும் இவை அவருக்குச் செய்யும் மரியாதை அல்ல என்று கூறியும் எழுதியும் வருகிறார்கள். மேற்கண்ட வழிபாட்டு முறைகள் எவ்வாறு இந்துத்துவ முறைகள் என்று அவர்கள் விளக்கியதில்லை.
மக்கள் தாங்கள் மரபு ரீதியாக கடைப்பிடித்து வரும் வழிபாட்டு முறைகளினூடே தான் தங்களின் கடவுள், தலைவர், அன்பிற்கு உரியவர்களை நினைவு கூறுவார்கள்.
இங்கு மட்டுமல்ல ஈழத்தில் நவம்பர் 27 மாவீரர் நாளையும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழியே தான் அம்மக்கள் மாவீரர்களை நினைவு கூறுகிறார்கள்.
- காளிங்கன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக