புதன், 5 செப்டம்பர், 2018

"பாசிசம் பாசிசம்தான் " மதுரை புத்தக திருவிழாவில் நடைபெற்ற நூல் அறிமுக விழா!

ஜிக்னேஷ் மேவானி அவர்களின் நேர்கானலை கலைவேலு என்பவர் தமிழில் மொழி பெயர்த்து, செஞ்சோலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "பாசிசம் பாசிசம்தான் " எனும் நூல் மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று 05.09.2018 மாலை சுமார் 6 மணியளவில் கடை எண்: தமிழ்த்தேசம் அங்காடி முன்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.குமரன் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் மூவேந்தர் புலிப்படையின் சார்பில் நானும் (மு.கா.வையவன், தலைமை இணை ஒருங்கிணைப்பாளர்), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் மீ.தா.பாண்டியன்,  மதுரா கல்லூரியின் முன்னால் முதல்வரும், PUCL-ன் மாநில செயலாளருமான பேராசிரியர் முரளி, "உயர்நீதிமன்றத்தில் தமிழ்" போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், தமிழ்ப் புலிகளின் பொதுச் செயலாளர் பேரறிவாளன், மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் புரட்சி வேங்கை மு.பா., தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, புரட்சிப் புலிகள் இயகத்தின் தலைவர் திலீபன், தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சியின் தலைவர் ணிபாபா, அம்பேத்கர் தேசிய இயக்கத்தின் தலைவர் அம்பேத்பாபு,  ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிமுகம் செய்தனர். முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் வழங்க ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி பெற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக