திங்கள், 29 அக்டோபர், 2018

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியில் கடந்த 27.10.2018 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் கருஞ்சிறுத்தைகள் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூவேந்தர் புலிப்படையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அமைப்புச் செயலாளர் தோழர்.ஸ்டாலின் அவர்களும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

இமானுவேல் சேகரனார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கும் படி தமிழக அரசுக்கு மூவேந்தர் புலிப்படை வேண்டுகோள்!

மதுரை சின்ன உடைப்பில் உள்ள தலைவர் இமானுவேல் சேகரனார் திருவுருவ சிலைக்கு மூவேந்தர் புலிப்படையின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் மாவட்ட நீதிமன்றம் அருகிலிருந்து மாலை அணிவிக்க சென்ற போது தெப்பக்குளம் காவல் சார்பு - ஆய்வாளர் ஆறுமுகம் ஐராவதநல்லூர் அருகே காருக்கு முன்பாக சென்ற இருக்கர வாகனத்தை மறித்து சாவியைப் பிடுங்கி, செல்லவிடாமல் நிறுத்தினார். அதனை கண்டித்து மறியல் நடைபெற்றது. சற்று நேரத்திற்கு பிறகு காவல்துறை மேலதிகாரிகள் உத்தரவின்படி
வண்டியிலிருந்து எடுத்த சாவியை சார்பு ஆய்வாளர் வண்டியிலேயே வைத்து விட்டார். மறியல் கைவிடப்பட்டு, எவ்வித அசம்பாவிதமுமின்றி கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் சென்று சமத்துவ தலைவர் இமானுவேல் சேகரனாருக்கும், புரட்சியாளர் அம்பேத்கருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைவரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கும் படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.