புதன், 5 செப்டம்பர், 2018

"கப்பலோட்டிய தமி்ழர்" வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் இன்று! மூவேந்தர் புலிப்படை தோழமை இயக்கங்களுடன் வீரவணக்கம் செலுத்தியது!!

=============================================

மூவேந்தர் புலிப்படையின் சார்பில் நானும் (மு.கா. வையவன், தலைமை இணை ஒருங்கிணைப்பாளர்), மாநில அமைப்புச் செயலாளர் ஸ்டாலின், மருது மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர், தோழர்.புரட்சி வேங்கை மு.பா., மாணவரணி செயலாளர் தோழர்.மலேசியாமுத்து, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தோழர்.சாகுல் அமீது, பழனிபாபா பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர்.முஜீபுர் ரகுமான் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினோம்.

=============================================

ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல்  ஓட்டிய தமிழர்...
தொழிலாளர்களுக்காகப் போராடிய தொழிற்சங்கத் தலைவர்...
சுதந்திரத்துக்காகத்  திலகரைத் தலைவராகக்கொண்டு கர்ஜித்த  சிங்கம்...
நீதி மன்றத்தில் சுதேசிகளுக்காக வாதாடிய வழக்குரைஞர்...

கடைசியில் சிறைப்பட்டு, செக்கிழுத்து வறுமையில் வாடினார் என்பதை எண்ணும்போது கல்லும் கரையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக