புதன், 5 செப்டம்பர், 2018

ஆண்டிப்பட்டி பங்களாவில் மூவேந்தர் புலிப்படையின் கொடியேற்று விழா!

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிப்பட்டி பங்களாவில் 01.09.2018 சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை மதுரை புறநகர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மாரிக்கண்ணன், வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் வசந்த் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் செ.பாஸ்கர் கொடியை ஏற்றினார். இளைஞர்கள், பெண்கள், முதியவர், குழந்தைகள் என அனைவரும் ஒன்று கூடி விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக