வியாழன், 13 செப்டம்பர், 2018

"தமிழக அரசு இமானுவேல் சேகரனாரின் திருவுருவ வெண்கல சிலையை தலைநகர் சென்னையில் அமைத்தும், நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்தும் அவரது தியாகத்தை போற்ற வேண்டும்" - மூவேந்தர் புலிப்படை வேண்டுகோள்.

"தமிழக அரசு இமானுவேல் சேகரனாரின் திருவுருவ வெண்கல சிலையை தலைநகர் சென்னையில் அமைத்தும், நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்தும் அவரது தியாகத்தை போற்ற வேண்டும்" - மூவேந்தர் புலிப்படை வேண்டுகோள்.

இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் செலுத்திய மூவேந்தர் புலிப்படை!

செப்டம்பர் - 11 "சமத்துவ போராளி" தலைவர் இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் என்பது நாம் மட்டுமல்ல நாடே அறிந்தது தான். அன்றைய தினத்தில் தேவேந்திரகுல மக்களும், சமத்துவத்திற்காக போராடும் இயக்கங்களும், அரசியல் கட்சியினரும் பேரணியாக சென்று மரியாதை செலுத்துவார்கள்.

அதே போல் மூவேந்தர் புலிப்படையின் சார்பில் மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள், இராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், விருதுநகர் மாவட்டம், திருநெல்வேலி மேற்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மகிழுந்து, சிற்றுந்து, மற்றும் பேருந்துகளில் பரமக்குடி நகருக்கு சென்று ஓட்டப்பாலத்தில் இருந்து எமது இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர் அவர்கள் தலைமையில் தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் மு.கா.வையவன், அமைப்புச் செயலாளர் ஸ்டாலின், சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் நிகரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் செ.தியாகராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் இராஜாரம், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த், முகவை மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார் உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகளும் தோழர்களும் முழக்கமிட்டு பேரணியாக சென்று தலைவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

அன்றைய சமூக மோதல்கள் பற்றி கவலையுற்ற போராளி இம்மானுவேல் சேகரனார் எமனேசுவரத்தில் நடைபெற்ற பாரதியார் விழா உரையின் போது...

"காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்"

என்ற பாடலுடன் உரையை முடித்தார்.

மனிதர்கள் மீது மட்டுமன்றி அனைத்து உயிர்களையும் நேசித்து சமூகத்தின் சம உரிமைக்காக முழு நேரப் பணியாளராய்ச் செயலாற்றி வந்தவர் அன்றிரவே சமூக விரோதிகளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்.

பாரதியின் நினைவு நாளன்றே சம உரிமைப் போரில் கொல்லப்பட்ட போராளி இம்மானுவேல் சேகரனாரின் பெயரை வரலாறு பொன் எழுத்துக்களில் எழுதிச் செல்லும்.

தமிழக அரசு இமானுவேல் சேகரனாரின் திருவுருவ வெண்கல சிலையை தலைநகர் சென்னையில் அமைத்தும்...
நினைவு நாளையோ அல்லது பிறந்த நாளையோ அரசு விழாவாக அறிவித்தும் அவரது தியாகத்தை போற்ற வேண்டும் என்று நினைவிடத்தில் இருந்து மூவேந்தர் புலிப்படை தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக