வெள்ளி, 19 ஜனவரி, 2018

மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் மூவேந்தர் புலிப்படையின் புதிய கிளை துவக்கம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் மூவேந்தர் புலிப்படையின் புதிய கிளை கடந்த ஞாயிற்று கிழமை மாலை ஆறு மணி அளவில் உருவாக்கப் பட்டது. இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செ.பாஸ்கர், தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் மு.கா.வையவன், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் ஒத்தக்கடை ரவி, அலங்கை ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டியன், வாடிப்பட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் மணிகண்டன், புறநகர் மாவட்ட இளைஞரணி பொருப்பாளர் தியாகு, கிழக்கு ஒன்றிய இளைஞரணி பொருப்பாளர் ஜெயப்பிரகாசு, பொம்மிநாயக்கன்பட்டி உறவின்முறை தலைவர் ரவி, ஊர்க்குடும்பன் மலர்மன்னன், காலாடி செல்வம், பழனி உள்ளிட்ட 40 பேர் கலந்துகொண்டனர். புதிய பொருப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக